இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7526ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏{‏وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا‏}‏ فِي الدُّعَاءِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
'{வலா தஜ்ஹர் பிஸலாதிக வலா துகாஃபித் பிஹா}' (உமது தொழுகையில் சப்தமிட்டு ஓதாதீர்; அதில் மிக மெதுவாகவும் ஓதாதீர்) எனும் இவ்வசனம் பிரார்த்தனை (துஆ) தொடர்பாக அருளப்பட்டது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
447 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ ‏{‏ وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا‏}‏ قَالَتْ أُنْزِلَ هَذَا فِي الدُّعَاءِ ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க (இறைவனின்) வசனமான, 'உமது தொழுகையில் (குர்ஆன் ஓதுவதிலோ அல்லது துஆ கேட்பதிலோ) சப்தமிட்டும் ஓதாதீர்; அதில் மிக மெதுவாகவும் ஓதாதீர்' (அல்-குர்ஆன் 17:110) என்பது, (தொழுகையில் செய்யப்படும்) பிரார்த்தனை (துஆ) விஷயத்தில் அருளப்பெற்றதாகும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح