அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை தாம் கேட்டதாக அறிவித்தார்கள்:
யா அல்லாஹ், நான் எந்த ஒரு முஃமினான அடியானை (மனித இயல்பு காரணமாக, கோபத்தில் அல்லது கடுமையாகப் பேசும் சந்தர்ப்பங்களில்) சபித்துவிடுகிறேனோ (அல்லது கடுமையாகப் பேசிவிடுகிறேனோ), அதை நீ மறுமை நாளில், அந்த அடியார் உன்னிடம் நெருங்குவதற்கான ஒரு காரணமாக ஆக்குவாயாக.