அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் எவரையும் அவரது செயல் (மட்டும்) ஈடேற்றாது."
(தோழர்கள்,) "அல்லாஹ்வின் தூதரே! உங்களையுமாவா?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "என்னையும்தான்; அல்லாஹ் தனது அருளால் என்னைச் சூழ்ந்து கொண்டால் தவிர. ஆகவே, நீங்கள் நேர்மையாக நடங்கள்; (பூரணத்துவத்தை) நெருங்கிச் செயல்படுங்கள்; காலையிலும், மாலையிலும், இரவின் ஒரு பகுதியிலும் (நற்காரியங்களில்) ஈடுபடுங்கள். நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்! நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்! (அப்போதுதான்) நீங்கள் (உங்கள் இலக்கை) அடைவீர்கள்."