அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நேர்மையாகச் செயல்படுங்கள்; (இலக்கை) நெருங்குங்கள்; நற்செய்தி பெறுங்கள்! ஏனெனில், நிச்சயமாக (உங்களில்) எவரையும் அவரது செயல் (மட்டும்) சொர்க்கத்தில் நுழைவிக்காது.”
(தோழர்கள்) “அல்லாஹ்வின் தூதரே! உங்களையுமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “என்னையுந்தான்; அல்லாஹ் தனது அருளால் என்னை அரவணைத்துக் கொண்டாலன்றி! மேலும் அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல், அது சிறியதாக இருந்தாலும் தொடர்ந்து செய்யப்படுவதேயாகும்” என்று கூறினார்கள்.