அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
"என்னுடைய உவமையும் என்னுடைய சமுதாயத்தின் உவமையும், நெருப்பை மூட்டிய ஒரு மனிதரின் உவமையைப் போன்றதாகும். அப்போது (அந்த) நெருப்பில் (சிறு) பிராணிகளும் விட்டில்பூச்சிகளும் விழத் தொடங்கின. நான் உங்களின் இடுப்புப் பிடியைப் பற்றி (அதில் விழாமல்) தடுக்கிறேன்; ஆனால் நீங்களோ அதில் பாய்ந்து விழுகிறீர்கள்."
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எனது உதாரணம், நெருப்பை மூட்டிய ஒரு மனிதரின் உதாரணத்தைப் போன்றதாகும். அந்நெருப்பு தன்னைச் சுற்றியுள்ளவற்றை ஒளிரச் செய்தபோது, விட்டில் பூச்சிகளும் (நெருப்பால் கவரப்பட்டு) அதில் விழும் (மற்ற) பூச்சிகளும் அதில் வந்து விழத் தொடங்கின. அவர் அவற்றைத் தடுக்கலானார். ஆனால் அவை அவரை மீறி அதில் பாய்ந்து விழுகின்றன.
இதுதான் எனக்கும் உங்களுக்குமான உதாரணமாகும். நான் உங்கள் இடுப்புக்கச்சைகளைப் பிடித்து, 'நரகத்தை விட்டு விலகி வாருங்கள்! நரகத்தை விட்டு விலகி வாருங்கள்!' என்று (உங்களை நரகத்தில் விழாமல்) தடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நீங்களோ என்னை மீறி அந்த (நரக) நெருப்பில் பாய்ந்து விழுகிறீர்கள்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எனது உவமையும் என் உம்மத்தின் உவமையும், நெருப்பை மூட்டிய ஒரு மனிதரின் உவமையைப் போன்றதாகும்; அதில் ஈக்களும் விட்டில் பூச்சிகளும் விழத் தொடங்கின. நான் உங்கள் இடுப்புக் கச்சைகளைப் பிடித்து (உங்களை நரகத்தில் விழுவதிலிருந்து) தடுத்துக் கொண்டிருக்கிறேன்; நீங்களோ அதில் பாய்ந்து விழுகிறீர்கள்."