அல்லாஹ் என் மீது புரிந்த அருட்கொடைகளில் ஒன்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில், என்னுடைய (முறை) நாளில், என் மார்புக்கும் கழுத்துக்கும் இடையில் (என் மடியில் சாய்ந்திருந்த நிலையில்) உயிர் நீத்ததும், அவர்களின் மரணத்தின்போது அல்லாஹ் என் உமிழ்நீரையும் அவர்களின் உமிழ்நீரையும் ஒன்று சேர்த்ததுமாகும் (நான் மிஸ்வாக்கை மென்மையாக்க என் வாயில் வைத்து மென்றதன் மூலம்).