அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்ததாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"முஃமின்கள் நரகத்திலிருந்து காப்பாற்றப்பட்டதும், அவர்கள் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அங்கு, இவ்வுலகில் அவர்களுக்குள் நிகழ்ந்த அநீதிகளுக்காக (ஒருவருக்கொருவர்) கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். அவர்கள் (பாவக்கறைகள் நீங்கி) தூய்மைப்படுத்தப்பட்டு சீர்படுத்தப்பட்டதும், சொர்க்கத்தில் நுழைவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவர், இவ்வுலகில் தமது இல்லத்தை அறிந்திருந்ததை விட (சொர்க்கத்திலுள்ள) தமது இருப்பிடத்தை மிக நன்கறிந்தவராக இருப்பார்."