حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُثْمَانَ بْنِ الأَسْوَدِ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي يُونُسَ، حَاتِمِ بْنِ أَبِي صَغِيرَةَ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ إِلاَّ هَلَكَ ". قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ، أَلَيْسَ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ {فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ * فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا}. قَالَ " ذَاكَ الْعَرْضُ يُعْرَضُونَ، وَمَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ ".
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “(மறுமை நாளில்) எவருடைய கணக்கு (தீவிரமாக) விசாரிக்கப்படுகிறதோ அவர் நாசமடைவார் (அதாவது நரகத்திற்குச் செல்வார்).” நான் கேட்டேன், “அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! அல்லாஹ் என்னைத் தங்களுக்குப் பகரமாக்குவானாக. ‘எவர் தமது பட்டோலை தமது வலக்கையில் கொடுக்கப்படுகிறாரோ, அவர் சுலபமான கேள்வி கணக்கிற்கு ஆளாக்கப்படுவார்’ (84:7-8) என்று அல்லாஹ் கூறவில்லையா?” அதற்கு அவர்கள் (ஸல்) பதிலளித்தார்கள், “அது (செயல் ஏடுகளை) சமர்ப்பிப்பதேயாகும்; ஆனால், எவருடைய கணக்கு துருவித் துருவி ஆராயப்படுகிறதோ, அவர் நாசமடைவார்.”
(இந்த ஹதீஸ் வேறு இரண்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது)
இப்னு அபீ முலைக்கா அவர்கள் அறிவித்தார்கள்: ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘யாரது கணக்கு விசாரிக்கப்படுகிறதோ, அவர் நாசமடைவார்’ என்று கூற நான் கேட்டேன்." நான் கேட்டேன்: 'அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தஆலா கூறினான்: பிறகு எவருக்கு அவரது பதிவேடு அவரது வலது கையில் கொடுக்கப்படுமோ, அவர் நிச்சயமாக இலகுவாக கணக்கு விசாரிக்கப்படுவார்.' அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'அது சமர்ப்பிப்பதுதான்.'"
அபூ ஈஸா கூறினார்கள்: இந்த ஹதீஸ் ஸஹீஹ் ஹஸன் ஆகும், அய்யூப் அவர்களும் இப்னு அபீ முலைக்கா அவர்களிடமிருந்து இதை அறிவித்துள்ளார்கள்.