அபூ இஸ்ஹாக் ஷைபானீ (ரஹ்) கூறினார்கள்: நான் அப்துல்லாஹ் இப்னு அபூ அவ்ஃபா (ரழி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறிந்து (தண்டனை) நிறைவேற்றினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். (நான் மீண்டும்) "சூரா அந்-நூர் அருளப்பட்ட பிறகா? அல்லது அதற்கு முன்பா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "எனக்குத் தெரியாது" என்றார்கள்.