ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் 'ஹத்' (இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட தண்டனைக்குரிய) குற்றத்தைச் செய்துவிட்டேன். எனவே என் மீது அதை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். (அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:) அப்போது தொழுகை நேரம் வந்தது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதார். தொழுகை முடிந்ததும் அவர், "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக நான் 'ஹத்' (இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட தண்டனைக்குரிய) குற்றத்தைச் செய்துவிட்டேன். எனவே என் விஷயத்தில் அல்லாஹ்வின் வேதத்(தின் சட்டத்)தை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எங்களுடன் நீரும் தொழுகையில் கலந்துகொண்டீரா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் "ஆம்" என்றார்.
நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக உமக்கு மன்னிக்கப்பட்டுவிட்டது" என்று கூறினார்கள்.