அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மாஇஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களிடம், "ஒருவேளை நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது (காம இச்சையுடன்) தீண்டியிருக்கலாம்; அல்லது (காம இச்சையுடன்) பார்த்திருக்கலாம்" என்று கூறினார்கள். அதற்கு அவர், “இல்லை” என்றார்.
"(அப்படியானால்) நீர் அவளுடன் உடலுறவு கொண்டீரா?" என்று (நபி (ஸல்) அவர்கள்) கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம்” என்றார்.
அப்போது, அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அவர் (நபி (ஸல்) அவர்கள்) கட்டளையிட்டார்கள்.
மூஸா (என்பவர்), "இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடமிருந்து" என்று (இந்த அறிவிப்பில்) குறிப்பிடவில்லை. இது வஹ்ப் என்பவரின் வாசகமாகும்.
وَعَنْ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا قَالَ: { لَمَّا أَتَى مَاعِزُ بْنُ مَالِكٍ إِلَى اَلنَّبِيِّ - صلى الله عليه وسلم -قَالَ لَهُ: لَعَلَّكَ قَبَّلْتَ, أَوْ غَمَزْتَ, أَوْ نَظَرْتَ? قَالَ: لَا يَا رَسُولَ اَللَّهِ. } رَوَاهُ اَلْبُخَارِيُّ [1]
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: 'மாஇஸ் இப்னு மாலிக் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது (விபச்சாரக் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்காக), அவர்கள் அவரிடம், "ஒருவேளை நீர் (அப்பெண்ணை) முத்தமிட்டிருக்கலாம், அல்லது தீண்டியிருக்கலாம், அல்லது பார்த்திருக்கலாம்?" எனக் கேட்டார்கள். அதற்கு அவர், 'இல்லை, அல்லாஹ்வின் தூதரே' என்றார்.' இதை அல்-புகாரி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.