நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"பெண்களின் திருமண (மற்றும் உடலுறவு) விஷயத்தில் அவர்களிடம் அனுமதி பெறுங்கள்." அப்போது, "(திருமணப் பேச்சு வரும்போது) ஒரு கன்னிப்பெண் வெட்கப்பட்டு மௌனமாக இருந்தால்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அதுவே அவளின் அனுமதியாகும்" என்று கூறினார்கள்.