உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்று அறிவித்தார்கள்:
"நிச்சயமாக இந்த வேதனை அல்லது நோய் (அதாவது, பிளேக் போன்ற தொற்றுநோய்) ஒரு தண்டனையாகும்; இதைக் கொண்டு உங்களுக்கு முன்னிருந்த சில சமூகங்கள் தண்டிக்கப்பட்டன. பிறகு அது பூமியில் தங்கிவிட்டது. அது ஒருமுறை நீங்குகிறது, மற்றொரு முறை தோன்றுகிறது. எனவே ஒரு நிலத்தில் அது இருப்பதாகக் கேள்விப்பட்டவர் அதன் பக்கம் செல்ல வேண்டாம். மேலும் ஒருவர் இருக்கும் நிலத்தில் அது ஏற்பட்டால், அதிலிருந்து தப்பி ஓடுவதற்காக (அங்கிருந்து) வெளியேற வேண்டாம்."