இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கடைசிப் பத்து இரவுகளில் அதனை (லைலத்துல் கத்ரை)த் தேடுங்கள். உங்களில் ஒருவர் பலவீனப்பட்டாலோ அல்லது இயலாவிட்டாலோ, மீதமுள்ள ஏழு இரவுகளில் (அதை அடைவதை விட்டும்) அவர் மிகைக்கப்பட வேண்டாம்."