حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ الْجَعْدِ أَبِي عُثْمَانَ، حَدَّثَنِي أَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ رَأَى مِنْ أَمِيرِهِ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَصْبِرْ عَلَيْهِ، فَإِنَّهُ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ شِبْرًا فَمَاتَ، إِلاَّ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவரேனும் தமது ஆட்சியாளரிடமிருந்து தாம் விரும்பாத ஏதேனும் ஒன்றைக் கண்டால், அவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், எவரொருவர் முஸ்லிம்களின் கூட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவேனும் பிரிந்து, பின்னர் (அந்த நிலையில்) மரணமடைந்தால், அவர் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் (கலகக்காரர்களான பாவிகளாக) மரணித்தவர்களைப் போன்று மரணிப்பார். (ஃபத்ஹுல் பாரி பக்கம் 112, பாகம் 16)"
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
தம்முடைய அமீரிடம் (ஆட்சியாளரிடம்) தமக்கு விருப்பமில்லாத ஒன்றைக் காண்பவர் பொறுமையாக இருக்கட்டும்; ஏனெனில், யார் முஸ்லிม்களின் ஜமாஅத்திலிருந்து ஒரு சாண் அளவு பிரிந்து, பிறகு (அந்த நிலையில்) மரணித்து விடுகிறாரோ, அவர் ஜாஹிலிய்யா (அறியாமைக் கால) மரணத்தை அடைவார்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் (வேறு அறிவிப்பாளர் தொடர் வழியாக) அறிவித்ததாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது அமீர் (ஆட்சியாளர்) செய்யும் ஒரு செயலை வெறுப்பவர் அதன் மீது பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், மக்களில் எவரேனும் அரசாங்கத்திடமிருந்து (தம் கீழ்ப்படிதலை) ஒரு சாண் அளவு விலகி, அந்த நிலையில் மரணித்தால், அவர் ஜாஹிலிய்யா காலத்து மரணத்தை அடைவார்.
وعن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: “من كره من أميره شيئاً فليصبر، فإنه من خرج من السلطان شبراً مات ميتة جاهلية” ((متفق عليه)) .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் தம்முடைய ஆட்சியாளரிடத்தில் தாம் வெறுக்கும் ஒன்றைக் கண்டால், அவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், யார் (முஸ்லிம்) சமூகத்திலிருந்து ஒரு சாண் அளவு பிரிகிறாரோ, அவர் அறியாமைக் காலத்து மரணத்தைப் போன்று மரணிப்பார்."