அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நானும் என் தந்தையின் சகோதரர் மக்களான இருவருடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! சர்வவல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்கள் பொறுப்பில் ஒப்படைத்துள்ளவற்றில் சிலவற்றுக்கு எங்களை அதிகாரிகளாக நியமியுங்கள்" என்று கூறினார். மற்றொருவரும் அது போன்றே கூறினார். அதற்கு அவர்கள் (ஸல்), "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் இப்பணிக்கு, இதைக் கேட்பவரையோ அல்லது இதற்கு ஆசைப்படுபவரையோ நியமிப்பதில்லை" என்று கூறினார்கள்.