حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِامْرَأَةٍ تَبْكِي عِنْدَ قَبْرٍ فَقَالَ " اتَّقِي اللَّهَ وَاصْبِرِي ". قَالَتْ إِلَيْكَ عَنِّي، فَإِنَّكَ لَمْ تُصَبْ بِمُصِيبَتِي، وَلَمْ تَعْرِفْهُ. فَقِيلَ لَهَا إِنَّهُ النَّبِيُّ صلى الله عليه وسلم. فَأَتَتْ باب النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ تَجِدْ عِنْدَهُ بَوَّابِينَ فَقَالَتْ لَمْ أَعْرِفْكَ. فَقَالَ " إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى ".
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு கல்லறைக்கு அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அவளிடம் அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் பொறுமையாக இருக்குமாறும் கூறினார்கள். அவள் அவரிடம், "என்னை விட்டு அகன்று செல்லுங்கள், ஏனெனில், என் துயரத்தைப் போன்ற துயரம் உமக்கு ஏற்படவில்லை" என்றாள். மேலும், அவள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பிறகு, அவர் நபி (ஸல்) அவர்கள் என்று அவளுக்கு அறிவிக்கப்பட்டது. அதனால், அவள் நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்குச் சென்றாள், அங்கே அவள் எந்தக் காவலரையும் காணவில்லை. பிறகு, அவள் அவரிடம், "நான் உங்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை" என்றாள். அவர்கள் கூறினார்கள், "நிச்சயமாக, பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் அதிர்ச்சியின்போது (காட்டப்படுவது) தான்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தன் குழந்தைக்காக அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணின் அருகே வந்து, அவளிடம் "அல்லாஹ்வை அஞ்சிக்கொள்; மேலும் பொறுமையாக இரு" என்று கூறினார்கள்.
அதற்கு அப்பெண், "என் துன்பத்தைப் பற்றி உமக்கென்ன கவலை?" என்று கூறினாள்.
அவர்கள் (அங்கிருந்து) சென்றதும், அவர்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்று அவளிடம் கூறப்பட்டது. உடனே அவளுக்கு உயிர் போவது போன்ற (பயம்) ஏற்பட்டது. ஆகவே அவள் அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்தாள். அவர்களின் வாசலில் வாயிற்காப்போர் எவரையும் அவள் காணவில்லை.
அவள், "அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை" என்று கூறினாள்.
அதற்கு அவர்கள், "நிச்சயமாகப் பொறுமை என்பது (துன்பம் ஏற்பட்ட) முதல் அதிர்ச்சியின்போதே (கடைப்பிடிக்க வேண்டியதாகும்)" என்று கூறினார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ أَتَى نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى امْرَأَةٍ تَبْكِي عَلَى صَبِيٍّ لَهَا فَقَالَ لَهَا " اتَّقِي اللَّهَ وَاصْبِرِي " . فَقَالَتْ وَمَا تُبَالِي أَنْتَ بِمُصِيبَتِي فَقِيلَ لَهَا هَذَا النَّبِيُّ صلى الله عليه وسلم . فَأَتَتْهُ فَلَمْ تَجِدْ عَلَى بَابِهِ بَوَّابِينَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَعْرِفْكَ فَقَالَ " إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى " . أَوْ " عِنْدَ أَوَّلِ صَدْمَةٍ " .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், தம் குழந்தைக்காக அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்றார்கள். அப்போது அவளிடம், "அல்லாஹ்வை அஞ்சு; பொறுமையாக இரு" என்று கூறினார்கள். அதற்கு அப்பெண், "எனது துன்பத்தைப் பற்றி உமக்கென்ன கவலை?" என்று கூறினாள். பிறகு, "இவர்தாம் நபி (ஸல்) அவர்கள்" என்று அவளிடம் கூறப்பட்டது. எனவே, அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அவர்களின் வாசலில் வாயிற்காப்போர் எவரையும் அவள் காணவில்லை. அவள், "அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை" என்று கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "பொறுமை என்பது (துயரம் ஏற்பட்ட) முதல் அதிர்ச்சியின்போதுதான்" என்று கூறினார்கள்.