இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2885ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ رَبِيعَةَ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَهِرَ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ قَالَ ‏"‏ لَيْتَ رَجُلاً مِنْ أَصْحَابِي صَالِحًا يَحْرُسُنِي اللَّيْلَةَ ‏"‏‏.‏ إِذْ سَمِعْنَا صَوْتَ سِلاَحٍ فَقَالَ ‏"‏ مَنْ هَذَا ‏"‏‏.‏ فَقَالَ أَنَا سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ، جِئْتُ لأَحْرُسَكَ‏.‏ وَنَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்தபோது (ஓர் இரவில்) விழித்திருந்தார்கள். அப்போது அவர்கள், "என் தோழர்களில் ஒரு ஸாலிஹான மனிதர் இன்று இரவு என்னைக் காவல் காத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!" என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதங்களின் ஓசையைக் கேட்டோம். "யார் அது?" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு, "நான் ஸஅத் பின் அபீ வக்காஸ்; தங்களைக் காவல் காப்பதற்காக வந்துள்ளேன்" என்று அவர் பதிலளித்தார். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
878அல்-அதப் அல்-முஃபரத்
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ‏:‏ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ يَقُولُ‏:‏ قَالَتْ عَائِشَةُ‏:‏ أَرِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَقَالَ‏:‏ لَيْتَ رَجُلاً صَالِحًا مِنْ أَصْحَابِي يَجِيئُنِي فَيَحْرُسَنِي اللَّيْلَةَ، إِذْ سَمِعْنَا صَوْتَ السِّلاَحِ، فَقَالَ‏:‏ مَنْ هَذَا‏؟‏ قَالَ‏:‏ سَعْدٌ يَا رَسُولَ اللهِ، جِئْتُ أَحْرُسُكَ، فَنَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى سَمِعْنَا غَطِيطَهُ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் தூக்கமின்றி இருந்தார்கள். அப்போது அவர்கள், 'என்னுடைய தோழர்களில் ஒரு நல்ல மனிதர் இன்றிரவு வந்து என்னைக் காவல் காத்தால் நன்றாக இருக்குமே!' என்று கூறினார்கள். அப்போது ஆயுதங்களின் சத்தத்தை நாங்கள் கேட்டோம். அவர்கள், 'யார் அது?' என்று கேட்டார்கள். அதற்கு (ஸஃது), 'அல்லாஹ்வின் தூதரே! ஸஃது (ஆகிய நான்), தங்களைக் காவல் காக்க வந்துள்ளேன்' என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் உறங்கினார்கள்; அவர்கள் குறட்டை விடும் சத்தத்தை நாங்கள் கேட்டோம்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صـحـيـح (الألباني)