இப்னு அப்பாஸ் (ரழி) என்னிடம், "சுவனத்துப் பெண் ஒருவரை உமக்கு நான் காட்டட்டுமா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அவர்கள் கூறினார்கள்: "இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன்; (அப்போது) என் ஆடை விலகி விடுகிறது. எனவே எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ விரும்பினால் பொறுமையாக இருக்கலாம்; உனக்குச் சுவனம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்க வேண்டி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்றார்கள். அப்பெண், 'நான் பொறுமையாகவே இருக்கிறேன்' என்று கூறிவிட்டு, '(ஆனால்) என் ஆடை விலகி விடுகிறதே! எனவே நான் ஆடை விலகாதிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்' என்றார். ஆகவே, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்."