"அல்லாஹ்வே! நான் உன்னிடமே என்னை ஒப்படைக்கிறேன்; நான் உன் மீது நம்பிக்கை கொள்கிறேன்; உன் மீதே முழு நம்பிக்கை வைக்கிறேன்; உன்னிடமே (பாவமன்னிப்புக் கோரி) திரும்புகிறேன்; மேலும் உனது உதவியைக் கொண்டே (எதிரிகளுடன்) வழக்காடினேன். அல்லாஹ்வே! நீ என்னை வழிதவறச் செய்வதிலிருந்து உனது கண்ணியத்தைக் கொண்டு உன்னிடமே நான் பாதுகாவல் தேடுகிறேன்; உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீ மரணிக்காத உயிருள்ளவன்; (ஆனால்) ஜின்களும் மனிதர்களும் மரணித்துவிடுவார்கள்."