அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹது தினத்தன்று ஒரு வாளைக் கையில் எடுத்து, "இதை என்னிடமிருந்து யார் பெற்றுக்கொள்வார்?" என்று கேட்டார்கள். மக்கள் தங்கள் கைகளை நீட்டி, அவர்களில் ஒவ்வொருவரும் "நான், நான்" என்று கூறினர். (அப்போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இதற்குரிய உரிமையை நிறைவேற்றுவதற்காக யார் இதை எடுத்துக்கொள்வார்?" என்று கேட்டார்கள். மக்கள் (அச்சவாலிலிருந்து) பின்வாங்கினர். உடனே சிமாக் பின் கரஷா எனப்படும் அபூதுஜானா (ரலி) அவர்கள், "இதற்குரிய உரிமையை நிறைவேற்றுவதற்காக நான் இதை எடுத்துக்கொள்கிறேன்" என்று கூறினார்கள். பின்னர் அவர்கள் அதை எடுத்துக்கொண்டு, இணைவைப்பாளர்களின் தலைகளைப் பிளந்தார்கள்.