حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ أَبَا حُمَيْدٍ السَّاعِدِيَّ، فِي عَشْرَةٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِيهِمْ أَبُو قَتَادَةَ فَقَالَ أَبُو حُمَيْدٍ أَنَا أَعْلَمُكُمْ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ . قَالُوا لِمَ فَوَاللَّهِ مَا كُنْتَ بِأَكْثَرِنَا لَهُ تَبَعَةً وَلاَ أَقْدَمَنَا لَهُ صُحْبَةً . قَالَ بَلَى . قَالُوا فَاعْرِضْ . قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ كَبَّرَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ وَيَقِرَّ كُلُّ عُضْوٍ مِنْهُ فِي مَوْضِعِهِ ثُمَّ يَقْرَأُ ثُمَّ يُكَبِّرُ وَيَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ ثُمَّ يَرْكَعُ وَيَضَعُ رَاحَتَيْهِ عَلَى رُكْبَتَيْهِ مُعْتَمِدًا لاَ يَصُبُّ رَأْسَهُ وَلاَ يُقْنِعُ مُعْتَدِلاً ثُمَّ يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ . وَيَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ حَتَّى يَقِرَّ كُلُّ عَظْمٍ إِلَى مَوْضِعِهِ ثُمَّ يَهْوِي إِلَى الأَرْضِ وَيُجَافِي يَدَيْهِ عَنْ جَنْبَيْهِ ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ وَيَثْنِي رِجْلَهُ الْيُسْرَى فَيَقْعُدُ عَلَيْهَا وَيَفْتَخُ أَصَابِعَ رِجْلَيْهِ إِذَا سَجَدَ ثُمَّ يَسْجُدُ ثُمَّ يُكَبِّرُ وَيَجْلِسُ عَلَى رِجْلِهِ الْيُسْرَى حَتَّى يَرْجِعَ كُلُّ عَظْمٍ مِنْهُ إِلَى مَوْضِعِهِ ثُمَّ يَقُومُ فَيَصْنَعُ فِي الرَّكْعَةِ الأُخْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ إِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ كَمَا صَنَعَ عِنْدَ افْتِتَاحِ الصَّلاَةِ ثُمَّ يُصَلِّي بَقِيَّةَ صَلاَتِهِ هَكَذَا حَتَّى إِذَا كَانَتِ السَّجْدَةُ الَّتِي يَنْقَضِي فِيهَا التَّسْلِيمُ أَخَّرَ إِحْدَى رِجْلَيْهِ وَجَلَسَ عَلَى شِقِّهِ الأَيْسَرِ مُتَوَرِّكًا . قَالُوا صَدَقْتَ هَكَذَا كَانَ يُصَلِّي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ .
முஹம்மது பின் அம்ரு பின் அதா அவர்கள் கூறினார்கள்:
அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் பத்து பேருடன் இருந்தபோது - அவர்களில் அபூ கதாதா (ரழி) அவர்களும் இருந்தார்கள் - அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ (ரழி) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி உங்களில் நானே அதிகம் அறிந்தவன்.” அதற்கு அவர்கள், “ஏன்? அல்லாஹ்வின் மீது ஆணையாக, எங்களை விட நீங்கள் அதிகமாக அவரைப் (ஸல்) பின்பற்றவில்லையே, மேலும், நீண்ட காலம் அவருடன் தோழமை கொள்ளவில்லையே” என்றார்கள். அதற்கு அவர் (ரழி), “ஆம், நான் தான்” என்றார்கள். அவர்கள், “எங்களுக்கு செய்து காட்டுங்கள்” என்றார்கள். அதற்கு அவர் (ரழி) கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால், தக்பீர் கூறுவார்கள். பின்னர், தம் இரு கைகளையும் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். அப்போது அவர்களின் உடலுறுப்புகள் அனைத்தும் அமைதியாக ஓரிடத்தில் நிலை கொள்ளும். பிறகு ஓதுவார்கள். பிறகு, தம் இரு கைகளையும் தோள்களுக்கு நேராக உயர்த்தி ருகூஃ செய்வார்கள். தம் உள்ளங்கைகளை முழங்கால்களின் மீது வைத்து, அதன் மீது ஊன்றுவார்கள். அப்போது தலையைத் தாழ்த்தவுமாட்டார்கள், உயர்த்தவுமாட்டார்கள்; சமநிலையில் வைத்திருப்பார்கள். பிறகு, “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் கேட்கிறான்) என்று கூறி, தம் இரு கைகளையும் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். அப்போது ஒவ்வொரு எலும்பும் அதன் இடத்திற்குத் திரும்பும் வரை நேராக நிற்பார்கள். பின்னர், தரையில் ஸஜ்தா செய்வார்கள். அப்போது தம் கைகளை விலாப்புறங்களிலிருந்து அகற்றி வைத்திருப்பார்கள். பிறகு, தலையை உயர்த்தி, இடது காலை மடக்கி அதன் மீது அமர்வார்கள். ஸஜ்தா செய்யும்போது கால் விரல்களை விரித்து வைப்பார்கள்.* பிறகு ஸஜ்தா செய்வார்கள். பிறகு தக்பீர் கூறி, இடது காலின் மீது அமர்வார்கள். அப்போது ஒவ்வொரு எலும்பும் அதன் இடத்திற்குத் திரும்பும் வரை அமர்ந்திருப்பார்கள். பிறகு எழுந்து நின்று, அடுத்த ரக்அத்திலும் அவ்வாறே செய்வார்கள். பிறகு, இரண்டு ரக்அத்களுக்குப் பிறகு எழும்போது, தொழுகையின் ஆரம்பத்தில் செய்தது போலவே தம் கைகளைத் தோள்கள் வரை உயர்த்துவார்கள். பின்னர், தொழுகையின் மீதிப் பகுதியையும் இவ்வாறே தொழுவார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முந்தைய ஸஜ்தாவைச் செய்து முடித்ததும், தம் ஒரு காலைப் பின்னுக்குத் தள்ளி, இடது புஜத்தின் மீது தம் உடல் படுமாறு அமர்வார்கள். இது ‘முதவர்ரிக்கன்’** எனப்படும்.” அதற்கு அவர்கள், “நீங்கள் உண்மையே கூறினீர்கள்; இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்” என்றார்கள்.
* அதாவது, கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி இருக்கும்படி ஊன்றி வைப்பார்கள்.
** முதவர்ரிக்கன்: அதாவது, இடது காலை முன்னோக்கி கொண்டு வந்து, புட்டம் தரையில் படுமாறு அமர்வது.