தர்மம் பற்றிய வசனம் அருளப்பட்டபோது, நாங்கள் (தர்மம் செய்வதற்காக) சுமை சுமக்கும் கூலி வேலை செய்து வந்தோம். அப்போது ஒரு மனிதர் வந்து அதிகமான (செல்வத்)தை தர்மம் செய்தார். உடனே அவர்கள் (நயவஞ்சகர்கள்), "இவர் முகஸ்துதிக்காகச் செய்கிறார்" என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ஒரு 'ஸாவு' (அளவு தானியத்)தை தர்மம் செய்தார். அதற்கு அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ் இவருடைய இந்த ஒரு 'ஸாவு' தர்மத்திற்குத் தேவையற்றவன்" என்று கூறினார்கள். அப்போது (பின்வரும் வசனம்) அருளப்பட்டது:
(இதன் பொருள்: "நம்பிக்கையாளர்களில் மனமுவந்து தர்மம் செய்பவர்களையும், தங்கள் உழைப்பால் கிடைத்ததைத் தவிர வேறு எதையும் (தர்மம் செய்ய) காண முடியாதவர்களையும் குறை கூறுபவர்கள்...") (திருக்குர்ஆன் 9:79).