ஒரு மனிதர் இருந்தார். அவரை விட பள்ளிவாசலிலிருந்து மிகத் தொலைவில் வசிக்கும் வேறெந்த மனிதரையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆயினும், (கூட்டுத்) தொழுகை எதுவும் அவருக்குத் தவறியதில்லை. அவரிடம் கூறப்பட்டது - அல்லது நான் அவரிடம் கூறினேன்: “நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால், இருண்ட இரவுகளிலும் கடும் வெப்பத்திலும் (பள்ளிக்கு வர) அதில் சவாரி செய்யலாமே!”
அதற்கு அவர், “என் வீடு பள்ளிவாசலுக்கு அருகிலேயே அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. பள்ளிவாசலுக்கு நான் நடந்து செல்வதும், (தொழுதுவிட்டு) என் குடும்பத்தாரிடம் நான் திரும்பி வருவதும் எனக்காகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நிச்சயமாக நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இவை அனைத்தையும் உமக்காக (ஒன்றாகச்) சேர்த்துவிட்டான்” என்று கூறினார்கள்.
-وعن أبي بن كعب رضي الله عنه قال: كان رجل من الأنصار لا أعلم أحدًا أبعد من المسجد منه، وكانت لا تخطئه صلاة! فقيل له: لو اشتريت حمارًا تركبه في الظلماء وفي الرمضاء قال: ما يسرني أن منزلي إلى جنب المسجد إني أريد أن يكتب لي ممشاي إلى المسجد، ورجوعي إذا رجعت إلى أهلي، فقال رسول الله صلى الله عليه وسلم: قد جمع الله لك ذلك كله ((رواه مسلم)).
உபய் இப்னு கஅப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். அவரை விட பள்ளிவாசலிலிருந்து அதிகத் தொலைவில் வசிப்பவர் எவரையும் நான் அறியவில்லை. இருப்பினும் எந்தத் தொழுகையும் அவருக்குத் தவறியதில்லை. அவரிடம், "நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால், இருளிலும் கடும் வெப்பத்திலும் அதில் சவாரி செய்து வரலாமே?" என்று கூறப்பட்டது.
அதற்கு அவர், "எனது வீடு பள்ளிவாசலுக்கு அருகில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. நான் பள்ளிவாசலை நோக்கி நடந்து வருவதும், (தொழுதுவிட்டு) என் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வதும் எனக்கு (நன்மையாகப்) பதிவு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உமக்கு அவை அனைத்தையும் ஒன்று சேர்த்துவிட்டான்" என்று கூறினார்கள்.