இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2631ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي كَبْشَةَ السَّلُولِيِّ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أَرْبَعُونَ خَصْلَةً أَعْلاَهُنَّ مَنِيحَةُ الْعَنْزِ، مَا مِنْ عَامِلٍ يَعْمَلُ بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا وَتَصْدِيقَ مَوْعُودِهَا إِلاَّ أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ ‏ ‏‏.‏ قَالَ حَسَّانُ فَعَدَدْنَا مَا دُونَ مَنِيحَةِ الْعَنْزِ مِنْ رَدِّ السَّلاَمِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَإِمَاطَةِ الأَذَى عَنِ الطَّرِيقِ وَنَحْوِهِ، فَمَا اسْتَطَعْنَا أَنْ نَبْلُغَ خَمْسَ عَشْرَةَ خَصْلَةً‏.‏
அப்துல்லாஹ் பின் `அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நாற்பது நற்செயல்கள் உள்ளன. அவற்றில் சிறந்தது ஒரு பெண் ஆட்டை ‘மனீஹா’வாக (பால் கறந்து பயன்பெற இரவல்) கொடுப்பதாகும். இந் நற்செயல்களில் ஒன்றை, அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்பார்த்தும், வாக்களிக்கப்பட்டதை மெய்ப்படுத்தியும் எவர் செய்கிறாரோ, அவரை அல்லாஹ் அதன் காரணமாக சொர்க்கத்தில் நுழையச் செய்வான்.”

ஹஸ்ஸான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் ‘மனீஹா’வுக்குக் கீழேயுள்ள (நற்செயல்களான) சலாமுக்கு பதிலளிப்பது, தும்மியவருக்கு (யர்ஹமுகல்லாஹ் என) மறுமொழி கூறுவது, பாதையிலிருந்துத் தொல்லை தருபவற்றை அகற்றுவது போன்றவற்றை கணக்கிட்டுப் பார்த்தோம். ஆனால், எங்களால் பதினைந்து நற்செயல்களைக் கூட அடைய முடியவில்லை.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح