இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

39ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ مُطَهَّرٍ، قَالَ حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ مَعْنِ بْنِ مُحَمَّدٍ الْغِفَارِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلاَّ غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا، وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَىْءٍ مِنَ الدُّلْجَةِ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தில் எவரேனும் (தம் சக்திக்கு மீறி) கடுமை காட்டினால், அவரை அது மிகைத்துவிடும். ஆகவே, நீங்கள் நேர்மையானதையே கடைப்பிடியுங்கள்; (பூரணத்துவத்தை) நெருங்கிச் செல்லுங்கள்; நற்செய்தி பெறுங்கள். மேலும், காலையிலும், மாலையிலும், இரவின் ஒரு பகுதியிலும் (வணக்கத்தின் மூலம்) உதவி தேடுங்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح