இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1597ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ أَنَّهُ جَاءَ إِلَى الْحَجَرِ الأَسْوَدِ فَقَبَّلَهُ، فَقَالَ إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ، وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ‏.‏
உமர் (ரழி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் (கருப்புக் கல்) அருகே வந்து, அதனை முத்தமிட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: "நிச்சயமாக, நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். நீ (யாருக்கும்) தீங்கிழைக்கவோ நன்மையளிக்கவோ மாட்டாய். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிருக்காவிட்டால், நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح