நுஃமான் பின் பஷீர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி நடப்பவருக்கும், அவற்றை மீறுபவர்களுக்கும் உவமையாவது, ஒரு கப்பலில் (இடம்பிடிக்க) சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்ட ஒரு கூட்டத்தாரின் உவமையைப் போன்றது. அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளமும், சிலருக்குக் கீழ் தளமும் கிடைத்தன. கீழ் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீர் எடுக்கும்போது தமக்கு மேலே இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.
எனவே அவர்கள், 'நாம் நமது பங்கில் (கீழ் தளத்தில்) ஒரு துளையிட்டுக் கொண்டால் நமக்கு மேலே இருப்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டோம்' என்று கூறினார்கள்.
அவர்கள் நாடியதைச் செய்ய (மேலே இருப்பவர்கள்) அவர்களை விட்டுவிட்டால் அனைவரும் அழிந்து போவார்கள். அவர்களுடைய கைகளைப் பிடித்து (தடுத்து)க் கொண்டால் அவர்களும் தப்பிப்பார்கள்; அனைவரும் தப்பிப்பார்கள்."