அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நிச்சயமாக கியாமத் நாளில் உரிமையுடையவர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் திருப்பிக் கொடுக்கப்படும். (அந்த அளவிற்கு என்றால்,) கொம்பில்லாத ஆட்டிற்கு கொம்புள்ள ஆட்டிடமிருந்து பழிவாங்கப்படும்.”