அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "திவாலானவன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (நபித்தோழர்கள்), "எங்களில் யாரிடம் திர்ஹமும் இல்லையோ, பொருளும் இல்லையோ அவரே திவாலானவர்" என்று கூறினார்கள்.
அதற்கு அவர்கள் (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: "நிச்சயமாக என் சமுதாயத்தில் திவாலானவன் யாரென்றால், மறுமை நாளில் தொழுகை, நோன்பு மற்றும் ஜகாத் ஆகியவற்றுடன் வருபவர் ஆவார். (அதேவேளை) அவர் ஒருவனைத் திட்டியிருப்பார்; ஒருவன் மீது அவதூறு கூறியிருப்பார்; ஒருவனது பொருளை (முறையின்றி) சாப்பிட்டிருப்பார்; ஒருவனது இரத்தம் சிந்தியிருப்பார்; ஒருவனை அடித்திருப்பார். எனவே (பாதிக்கப்பட்ட) இவருக்கு அவருடைய நன்மைகளிலிருந்து கொடுக்கப்படும்; இன்னும் அவருக்கு அவருடைய நன்மைகளிலிருந்து கொடுக்கப்படும். அவர் மீதுள்ள கடமைகள் தீர்க்கப்படும் முன்பே அவருடைய நன்மைகள் தீர்ந்துவிட்டால், அவர்களுடைய (பாதிக்கப்பட்டவர்களுடைய) பாவங்களிலிருந்து எடுக்கப்பட்டு அவர் மீது சுமத்தப்படும்; பிறகு அவர் நரகத்தில் வீசப்படுவார்."