அபூ கத்தாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் தொழுகைக்காக நிற்கிறேன்; அதை நீளமாக்க வேண்டுமென விரும்புகிறேன். அப்போது ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். எனவே, அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் கொடுப்பதை நான் விரும்பாததால், எனது தொழுகையைச் சுருக்கிக் கொள்கிறேன்."
நான் தொழுகைக்காக நிற்கும்போதெல்லாம், அதை நீட்டித் தொழவே விரும்புவேன். ஆனால், ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்கும்போது, அதன் தாய்க்குச் சிரமம் உண்டாக்குவதை நான் விரும்பாத காரணத்தால், என் தொழுகையைச் சுருக்கிக் கொள்வேன்.
நான் தொழுகையில் நிற்பேன். அப்போது ஒரு குழந்தை அழும் சப்தத்தைக் கேட்பேன். நான் அக்குழந்தையின் தாயாருக்குச் சிரமம் ஏற்படுத்த விரும்பாததால், எனது தொழுகையைச் சுருக்கிக் கொள்வேன்.