ஜுன்தப் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் சுப்ஹு (ஃபஜ்ர்) தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார். எனவே, அல்லாஹ் தனது பாதுகாப்புத் தொடர்பாக உங்களிடம் எதையும் கோராதவாறு (கவனமாக) இருந்து கொள்ளுங்கள். ஏனெனில், அவன் எவரிடம் (விளக்கம்) கோருகிறானோ அவரைப் பிடித்துவிடுவான்; பின்னர் அவரை நரக நெருப்பில் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்."
"யார் சுப்ஹு (ஃபஜ்ர்) தொழுகையைத் தொழுகிறாரோ, அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார். எனவே, அல்லாஹ் தனது பாதுகாப்பிலுள்ள எதற்காகவும் உங்களைத் தேடும் (விசாரிக்கும்) நிலை ஏற்படவேண்டாம். ஏனெனில், தனது பாதுகாப்பிலுள்ள எதற்காகவும் எவரையேனும் அவன் தேடினால், அவரை அவன் (தப்பவிடாமல்) பிடித்துவிடுவான்; பின்னர் அவரை நரக நெருப்பில் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்."