`அப்துல்லாஹ் பின் `உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவன் அவனுக்கு அநீதி இழைக்கமாட்டான்; அவனைக் கைவிடவும் மாட்டான். எவர் தம் சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் இருக்கிறாரோ, அல்லாஹ் அவரது தேவையை நிறைவேற்றுவதில் இருப்பான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ, அல்லாஹ் அவரை விட்டும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமை(ன் குறையை) மறைக்கிறாரோ, அல்லாஹ் மறுமை நாளில் அவரை மறைப்பான்."
ஸாலிம் அவர்கள், தமது தந்தை (ரலி) அவர்கள் வாயிலாக அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் அவருக்கு அநீதி இழைக்கவோ, அவரைக் கைவிட்டுவிடவோ கூடாது. எவர் தம் சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் இருக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் இருப்பான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ, அல்லாஹ் அவரைவிட்டு மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமின் (குறைகளை) மறைக்கிறாரோ, மறுமை நாளில் அல்லாஹ் அவரை மறைப்பான்."