ஆயித் இப்னு அம்ரு (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபூ சுஃப்யான் (ரழி) அவர்கள், சல்மான் (ரழி), சுஹைப் (ரழி) மற்றும் பிலால் (ரழி) ஆகியோர் இருந்த ஒரு கூட்டத்தினரின் அருகே வந்தார்கள். அவர்கள் (மூவரும்):
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் வாள், அல்லாஹ்வின் எதிரியின் கழுத்தில் அடைய வேண்டிய இடத்தை அடையவில்லை" என்று கூறினார்கள்.
அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள்: "குறைஷிகளின் பெரியவரும் அவர்களின் தலைவருமானவரைப் பார்த்தா இவ்வாறு நீங்கள் கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
பிறகு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, இதைப்பற்றித் தெரிவித்தார்கள். அப்போது அவர்கள் (நபியவர்கள்) கூறினார்கள்: "அபூபக்கரே! ஒருவேளை நீங்கள் அவர்களைக் கோபப்படுத்திவிட்டீர்களோ? நீங்கள் அவர்களைக் கோபப்படுத்தியிருந்தால், நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனைக் கோபப்படுத்திவிட்டீர்கள்."
எனவே அபூபக்கர் (ரழி) அவர்கள் அவர்களிடம் வந்து: "என் சகோதரர்களே! நான் உங்களைக் கோபப்படுத்திவிட்டேனா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: "இல்லை, என் சகோதரரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக."