அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தன் உறவினரானாலும் சரி, அல்லது உறவினர் அல்லாதவரானாலும் சரி, ஓர் அனாதையைப் பராமரிப்பவரும் நானும் சொர்க்கத்தில் இதோ இவ்விரண்டைப் போன்று இருப்போம்.” மாலிக் (ரஹ்) அவர்கள் தமது ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் சுட்டிக்காட்டினார்கள்.