அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
ஓரிரு பேரீச்சம்பழங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்படுபவரோ, அல்லது ஓரிரு கவளம் உணவு கொடுக்கப்பட்டு அனுப்பப்படுபவரோ மிஸ்கீன் அல்லர். உண்மையில், (யாசிப்பதை விட்டும்) தவிர்ந்து கொள்பவரே மிஸ்கீன் ஆவார். நீங்கள் விரும்பினால், '(அவர்கள் மனிதர்களிடம் வற்புறுத்திக் கேட்க மாட்டார்கள்)' (2:273) என்ற இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.