இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2463ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ يَمْنَعُ جَارٌ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَهُ فِي جِدَارِهِ ‏ ‏‏.‏ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ مَا لِي أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ وَاللَّهِ لأَرْمِيَنَّ بِهَا بَيْنَ أَكْتَافِكُمْ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தம் அண்டை வீட்டார் தம் (வீட்டுச்) சுவரில் மரத்தைப் பதிப்பதை எவரும் தடுக்க வேண்டாம்.”

பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் இதைப் புறக்கணிப்பர்களாக இருப்பதை நான் காண்கிறேன்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் இதனை உங்கள் தோள்களுக்கிடையே வீசுவேன்” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1609 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ يَمْنَعْ أَحَدُكُمْ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَةً فِي جِدَارِهِ ‏ ‏ ‏.‏ قَالَ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ مَا لِي أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ وَاللَّهِ لأَرْمِيَنَّ بِهَا بَيْنَ أَكْتَافِكُمْ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
உங்களில் எவரும், தமது அண்டை வீட்டார் தம் சுவரில் உத்திரம் பதிப்பதை தடுக்க வேண்டாம்.

பிறகு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: (நபியவர்களின் இந்த கட்டளையை) நீங்கள் புறக்கணிப்பதை நான் காண்கிறேனே, இது என்ன?
அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் நிச்சயமாக இதை உங்கள் தோள்களுக்கு இடையில் எறிவேன் (இதை உங்களுக்கு அறிவிப்பேன்).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح