மைமூனா பின்த் அல்-ஹாரிஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அவர்கள் நபி (ஸல்) அவர்களின் அனுமதியைப் பெறாமலேயே ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களுடன் (தங்குவதற்காக) தமக்கு வந்த நாளில் அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் என்னுடைய அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ அவ்வாறு செய்தாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக, அவளை நீ உன் தாய்மாமன்களுக்கு (உதவியாக) அளித்திருந்தால், உனக்கு அதிக நற்கூலி கிடைத்திருக்கும்" என்று கூறினார்கள்.