حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالسَّوْءِ كَحَامِلِ الْمِسْكِ وَنَافِخِ الْكِيرِ، فَحَامِلُ الْمِسْكِ إِمَّا أَنْ يُحْذِيَكَ، وَإِمَّا أَنْ تَبْتَاعَ مِنْهُ، وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً، وَنَافِخُ الْكِيرِ إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ، وَإِمَّا أَنْ تَجِدَ رِيحًا خَبِيثَةً .
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நல்ல தோழருக்கும் தீய தோழருக்கும் உதாரணமாவது, கஸ்தூரியைச் சுமப்பவர் மற்றும் உலைத் துருத்தியை ஊதுபவர் போன்றதாகும். கஸ்தூரியைச் சுமப்பவர், ஒன்று உமக்கு (அதை) அன்பளிப்பாகத் தருவார்; அல்லது நீர் அவரிடமிருந்து (அதை) விலைக்கு வாங்குவீர்; அல்லது அவரிடமிருந்து நறுமணத்தை நுகர்வீர். உலைத் துருத்தியை ஊதுபவரோ, ஒன்று உமது ஆடைகளை எரித்துவிடுவார்; அல்லது அவரிடமிருந்து நீர் துர்நாற்றத்தை நுகர்வீர்."
அபு மூஸா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உவமையாவது, கஸ்தூரி வைத்திருப்பவரும், துருத்தி ஊதுபவரும் ஆவர். கஸ்தூரி வைத்திருப்பவர், ஒன்று அவர் உங்களுக்கு (அதை) அன்பளிப்பாகத் தருவார்; அல்லது நீங்கள் அவரிடமிருந்து அதை விலைக்கு வாங்குவீர்கள்; அல்லது நீங்கள் அவரிடமிருந்து நறுமணத்தையாவது நுகர்வீர்கள். துருத்தி ஊதுபவரோ, ஒன்று அவர் உங்கள் ஆடைகளை எரித்துவிடுவார்; அல்லது நீங்கள் துர்நாற்றத்தை நுகர்வீர்கள்.”