அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
நிச்சயமாக. அல்லாஹ் மறுமை நாளில் கூறுவான்: என் மகிமைக்காக ஒருவருக்கொருவர் அன்பு கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத இன்றைய நாளில், நான் அவர்களை என்னுடைய நிழலில் தங்க வைப்பேன்.