இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

657 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ خَالِدٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ سَمِعْتُ جُنْدَبًا الْقَسْرِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ صَلَّى صَلاَةَ الصُّبْحِ فَهْوَ فِي ذِمَّةِ اللَّهِ فَلاَ يَطْلُبَنَّكُمُ اللَّهُ مِنْ ذِمَّتِهِ بِشَىْءٍ فَإِنَّهُ مَنْ يَطْلُبْهُ مِنْ ذِمَّتِهِ بِشَىْءٍ يُدْرِكْهُ ثُمَّ يَكُبَّهُ عَلَى وَجْهِهِ فِي نَارِ جَهَنَّمَ ‏ ‏ ‏.‏
ஜுன்துப் அல்கஸ்ரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"யார் சுப்ஹு (ஃபஜ்ர்) தொழுகையைத் தொழுகிறாரோ, அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார். எனவே, அல்லாஹ் தனது பாதுகாப்பிலுள்ள எதற்காகவும் உங்களைத் தேடும் (விசாரிக்கும்) நிலை ஏற்படவேண்டாம். ஏனெனில், தனது பாதுகாப்பிலுள்ள எதற்காகவும் எவரையேனும் அவன் தேடினால், அவரை அவன் (தப்பவிடாமல்) பிடித்துவிடுவான்; பின்னர் அவரை நரக நெருப்பில் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح