அபூ மாலிக் (ரஹ்) அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "எவர் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை) என்று கூறி, அல்லாஹ்வையன்றி வணங்கப்படுபவற்றை நிராகரிக்கிறாரோ, அவருடைய செல்வமும் இரத்தமும் ஹராமாக்கப்படுகின்றன. மேலும், அவருடைய கணக்கு அல்லாஹ்விடமே உள்ளது."