மிக்தாத் பின் அல்-அஸ்வத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "மறுமை நாளில், சூரியன் படைப்பினங்களுக்கு மிக அருகில் கொண்டுவரப்படும். எந்தளவென்றால், அது அவர்களிடமிருந்து ஒரு 'மைல்' தொலைவில் இருக்கும்."
சுலைம் பின் ஆமிர் அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'மைல்' என்பதன் மூலம் பூமியின் தூர அளவையோ அல்லது கண்ணுக்கு மை தீட்டும் குச்சியையோ, எதை அவர்கள் நாடினார்கள் என எனக்குத் தெரியாது."
(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்): "மக்கள் தங்கள் செயல்களுக்கு ஏற்ப வியர்வையில் இருப்பார்கள். அவர்களில் சிலருக்கு (வியர்வை) அவர்களின் கணுக்கால்கள் வரையிலும், சிலருக்கு அவர்களின் முழங்கால்கள் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்பு வரையிலும் இருக்கும். இன்னும் சிலரை வியர்வை கடிவாளமிடும்." (இவ்வாறு கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கையால் தம் வாயைச் சுட்டிக்காட்டினார்கள்.