அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக ஓர் இறைமறுப்பாளன் ஒரு நற்செயல் செய்தால், அதன் மூலம் அவனுக்கு இவ்வுலகில் உணவளிக்கப்படுகிறது. ஆனால் இறைநம்பிக்கையாளரைப் பொறுத்தவரை, நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய நற்செயல்களை மறுமைக்காகச் சேமித்து வைக்கிறான். மேலும், அவன் (அல்லாஹ்வுக்குக்) கீழ்ப்படிந்து நடப்பதற்கு ஏற்ப அவனுக்கு இவ்வுலகில் வாழ்வாதாரத்தை வழங்குகிறான்."