இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2759 a, bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ،
قَالَ سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِنَّ
اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ
اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا ‏ ‏ ‏.‏

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏
அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் (கண்ணியமும் மகத்துவமும் மிக்கவன்), பகலில் பாவம் செய்தவர் (தன்னிடம்) பாவமன்னிப்புத் தேடுவதற்காக இரவில் தனது கரத்தை நீட்டுகிறான்; இரவில் பாவம் செய்தவர் (தன்னிடம்) பாவமன்னிப்புத் தேடுவதற்காகப் பகலில் தனது கரத்தை நீட்டுகிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை (இந்த வாய்ப்பு தொடரும்).”

இதே அறிவிப்பாளர் தொடர் வழியாக ஷுஅபா அவர்களிடமிருந்து இது போன்றே மற்றோர் அறிவிப்பும் வந்துள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح