وعن ابن عمر رضي الله عنهما قال: أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال: كن فى الدنيا كأنك غريب أو عابر سبيل .
وكان ابن عمر رضي الله عنهما يقول: إذا أمسيت، فلا تنتظر الصباح، وإذا أصبحت، فلا تنتظر المساء، وخذ من صحتك لمرضك، ومن حياتك لموتك “ ((رواه البخاري)).
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய தோள்களைப் பிடித்துக்கொண்டு, "நீ உலகில் ஒரு அந்நியனைப் போல அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல இரு" என்று கூறினார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறுவார்கள்: நீ மாலை நேரத்தை அடைந்தால், காலை வரை உயிர் வாழ்வாய் என்று எதிர்பார்க்காதே; நீ காலை நேரத்தை அடைந்தால், மாலை வரை உயிர் வாழ்வாய் என்று எதிர்பார்க்காதே. உனது ஆரோக்கியத்தின் போது உனது நோய்க்காகவும், உனது வாழ்நாளின் போது உனது மரணத்திற்காகவும் (நல்லறங்களைச்) செய்துகொள்.