அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
“யார் இஸ்லாத்தைத் தழுவினாரோ, மேலும் யாருக்குத் தமது தேவைக்குப் போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டதோ, மேலும் அல்லாஹ் அவருக்கு வழங்கியதைக் கொண்டு அவரைத் திருப்தியடையச் செய்தானோ, அவர் நிச்சயமாக வெற்றி பெற்றார்.”
யார் இஸ்லாத்தை ஏற்று, அவருடைய வாழ்வாதாரம் போதுமானதாக (அதிகமில்லாமல், குறைவில்லாமல்) இருந்து, அல்லாஹ் அவரை திருப்திப்படுத்தினானோ, அவர் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டார்.