حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، وَخَيْرُ الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ . وَعَنْ وُهَيْبٍ، قَالَ أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ بِهَذَا.
ஹகீம் பின் ஹிஸாம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தாழ்ந்த கையை விட உயர்ந்த கையே சிறந்ததாகும். உமது பராமரிப்பில் உள்ளவர்களிலிருந்து (தர்மத்தைத்) துவங்குவீராக! (தன் தேவைகள் போக) எஞ்சி இருப்பதைக் கொண்டு செய்யும் தர்மமே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கேட்பதைத் தவிர்த்து) தன்மானத்துடன் இருக்கிறாரோ, அல்லாஹ் அவரைத் தன்மானத்துடன் வைத்திருப்பான். யார் தன்னிறைவை நாடுகிறாரோ, அல்லாஹ் அவரைத் தன்னிறைவு பெற்றவராக ஆக்குவான்.”