இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1041ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَوَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِ، الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ سَأَلَ النَّاسَ أَمْوَالَهُمْ تَكَثُّرًا فَإِنَّمَا يَسْأَلُ جَمْرًا فَلْيَسْتَقِلَّ أَوْ لِيَسْتَكْثِرْ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தன்னுடைய (செல்வத்தை) அதிகரித்துக் கொள்வதற்காக பிறருடைய செல்வத்தை யாசிக்கிறாரோ, அவர் நெருப்புக் கங்குகளை மட்டுமே யாசிக்கிறார்; எனவே, அவர் குறைவாக யாசிக்கட்டும் அல்லது அதிகமாக யாசிக்கட்டும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح