حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَيْسَ الْمِسْكِينُ الَّذِي يَطُوفُ عَلَى النَّاسِ تَرُدُّهُ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ، وَلَكِنِ الْمِسْكِينُ الَّذِي لاَ يَجِدُ غِنًى يُغْنِيهِ، وَلاَ يُفْطَنُ بِهِ فَيُتَصَدَّقُ عَلَيْهِ، وَلاَ يَقُومُ فَيَسْأَلُ النَّاسَ .
அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "மக்களிடம் (யாசிப்பதற்காக) சுற்றித் திரிந்து, ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள், அல்லது ஒரு பேரீச்சம்பழம் அல்லது இரண்டு பேரீச்சம்பழங்கள் (கிடைத்ததும் திருப்தியடைந்து) திரும்பிச் செல்பவர் (உண்மையான) ஏழை அல்லர். மாறாக, தம்மைத் தன்னிறைவு படுத்திக்கொள்ளும் அளவுக்குச் செல்வம் இல்லாமலும், (அவரது வறுமை நிலை) அறியப்படாததால் அவருக்குத் தர்மம் வழங்கப்படாமலும், மக்களிடம் (தாமே) முன்வந்து கேட்காமலும் இருக்கிறாரே அவர்தாம் (உண்மையான) ஏழை ஆவார்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(உண்மையான) ஏழை (மிஸ்கீன்) என்பவன், மக்களிடம் சுற்றித்திரிந்து ஒரு கவளம் அல்லது இரண்டு கவளம் உணவையோ, அல்லது ஒரு பேரீச்சம்பழம் அல்லது இரண்டு பேரீச்சம்பழங்களையோ கொண்டு (அவனது பசி நீங்கி) திரும்பிச் செல்பவன் அல்லன்." அதற்கு அவர்கள், "அப்படியானால், ஏழை (மிஸ்கீன்) என்றால் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(உண்மையான ஏழை என்பவன்) தனக்குத் தேவையான செல்வம் இல்லாதவன்; அவனது நிலையை யாரும் அறிந்து அவனுக்கு தர்மம் செய்வதில்லை; மேலும், அவன் மக்களிடம் எழுந்து நின்று யாசிக்கவும் மாட்டான்" என்று கூறினார்கள்.